சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராகப் பணிபுரிந்த சண்முகநாதன் (80), உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மாலை (டிச.21) காலமானார்.
யார் இந்த சண்முகநாதன் ?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன நினைக்கிறார், என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை எல்லாம் உணர்ந்து செயல்பட அவருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உரியவராக விளங்கி அவரின் நிழலாகவே வாழ்ந்தவர் சண்முகநாதன். இவர் 48 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருணாநிதியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
இதனையடுத்து, சண்முகநாதன் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது இறப்பு நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
![ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-cmstalin-7209106_21122021193950_2112f_1640095790_666.jpg)
நீ உனது பணிகளைக் கவனி
இதனிடையே, சண்முகநாதன் மறைவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார்.
அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை.
![சண்முகநாதன் திருமண நிகழ்வில் ஸ்டாலின், அழகிரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13972196_ks.jpeg)
சண்முகநாதனின் மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் ஸ்டாலின்
அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். இன்று அவரை இந்தக் கோலத்தில் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே!
-
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக அவர் நீடு வாழ்வார்!https://t.co/EsVd4fhLD8 pic.twitter.com/4eRcKhXxx1
">முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 21, 2021
உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக அவர் நீடு வாழ்வார்!https://t.co/EsVd4fhLD8 pic.twitter.com/4eRcKhXxx1முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 21, 2021
உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக அவர் நீடு வாழ்வார்!https://t.co/EsVd4fhLD8 pic.twitter.com/4eRcKhXxx1
அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும்
அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.
'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார், தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவார். அத்தனையிலும் அவரது அன்பும், என் மீதான பாசமும், கருணாநிதி மீதான மரியாதையும்தான் பொங்கி வரும்.
![கலைஞரின் நிழல் சண்முகநாதன் மறைவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13972196_ks123.jpg)